கேரளாவில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த மத போதகர் கைது.. ஜாகிர் நாயக் சிஷ்யராம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த மத போதகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் ஜாகிர் நாயக் போதனையால் கவரப்பட்ட மத போதகர் என்று கூறப்படுகிது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டில் இருந்து 21 பேர் திடீரென மாயமானார்கள். இவர்கள் சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் நிமிஷா பாத்திமாவை மதம் மாற்றியது திருவனந்தபுரத்தை சேர்ந்த ஓரு டாக்டர் என அவரது தாய் பி்ந்து கூறினார்.

Kerala Police arrest Zakir Naik's aide for allegedly recruiting youths for ISIS

இது தவிர கொச்சியை சேர்ந்த மெரி்ன் என்ற பெண்ணை பாலக்காட்டை சேர்ந்த யாகியா என்பவர் மதம் மாற்றி ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மெரினின் சகோதர் ஜேக்கப் கொச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் எனது தங்கை மெரினை பாலக்காட்டை சேர்ந்த யகியா மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன் யகியா என்னை மும்பைக்கு அழைத்து சென்றார். அங்கு மதபோதகர் குரோஷி என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் என்னிடம் இஸ்லாம் மதம் குறித்து கூறி முஸ்லிமாக மாற கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் மதம் மாற விருப்பம் இல்லை என்று கூறி ஊர் வந்து விட்டேன். எனது தங்கையை யகியா குரோஷி மூலமாகதான் மதம் மாற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கொச்சி போலீசார் யகியா மற்றும் மும்பையை சேர்ந்த குரோஷி ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் நவி மும்பை பகுதியில் ஓரு வீ்ட்டில் பதுங்கியிருந்த குரோஷியை மும்பை போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர். இவர் ஜாகிர் நாயக் போதனையால் கவரப்பட்ட மத போதகர் என்று கூறப்படுகிது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+