கேரளா: இன்னொரு அபயா? கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு- போலீஸ் தீவிர விசாரணை
கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சர்ச் கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளா கான்வென்ட்டுகளில் கன்னியாஸ்திரிகள் தொடர்பான சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிடுகின்றன. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கோட்டயம் கன்னியாஸ்திரி அபயா மர்ம மரண வழக்கு நாட்டையே உலுக்கியது.
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி அபயா, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக 2 சிபிஐ குழுக்கள் விசாரணை நடத்தியும் அபயா மர்ம மரணத்தின் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.

அபயா கொலை
3-வது சிபிஐ குழு நடத்திய விசாரணையில்தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலத்துக்கு வந்தன. கன்னியாஸ்திரி செபி என்பவருடன் 2 பாதிரியார்கள் தகாத உறவு வைத்திருந்ததை அபயா பார்த்ததால் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவருக்கு ஆயுள் தண்டனை
28 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. கன்னியாஸ்திரி செபி, பாதிரியார் கோட்டூர் தாமஸ் ஆகியோருக்கு அபயா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பரபரப்புகள் ஓய்ந்து சில மாதங்களுக்குள் கொல்லம் கான்வென்ட் கிணறில் மற்றொரு கன்னியாஸ்திரி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொல்லம் கன்னியாஸ்திரி
கொல்லம் கான்வென்ட்டில் தங்கி இருந்த பவும்பாவை சேர்ந்த மேப்லி ஜோசப் என்ற கன்னியாஸ்திரி காலையில் பிரார்த்தனைக்கு வரவில்லை. இதனையடுத்து அவர் தேடப்பட்டதாகவும் அப்போது கிணற்றில் சடலமாக மிதந்த நிலையில் அவரது உடல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கன்னியாஸ்திரி தற்கொலையா?
தற்போது கன்னியாஸ்திரியின் உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கிலும் இது தற்கொலையாக இருக்கலாம் என்றே இப்போது கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் விசாரணையில்தான் உண்மை என்னவென்று தெரியவரும். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications