தமிழகத்திலிருந்து வரும் பழம், காய்களில் பூச்சி மருந்து.. கேரளப் புகாரில் உண்மை இருக்கிறதா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழகத்திலிருந்து வரும் வேளாண் விளை பொருட்களில் அதிக அளவில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக கேரளா சொல்லும் புகாரில் உண்மை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை மிகைப்படுத்தப்பட்ட புகார் என்றும், இது கேரள அரசுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

கேரள உணவுப் பாதுகாப்பு கமிஷனர் அனுபமா என்பவர், மே 20ம் தேதி தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்ப்படும் வேளாண் விளை பொருட்களில் அதிக அளவு பூச்சி மருந்து கலந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மிக மிக அதிக அளவில் தமிழக விவசாயிகள் வேதிப் பொருட்களையும், பூச்சி மருந்தையும் பயிர்களில் கலப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தமிழகத்திலிருந்து வரும் பொருட்கலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 முதல் பத்து மடங்கு பூச்சி மருந்து கலந்திருப்தபாகவும் அவர் கூறியிருந்தார்.

3 பேர் கமிட்டி ஆய்வு...

3 பேர் கமிட்டி ஆய்வு...

இதுதொடர்பாக கேரளாவிலிருந்து 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றும் தமிழகத்திற்கு விஜயம் செய்து ஆய்வும் நடத்தியது. இதுகுறித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அனுபமா கூறியிருந்தார்.

மிகைப்படுத்தப் பட்ட புகார்...

மிகைப்படுத்தப் பட்ட புகார்...

இது தொடர்பாக தி நியூஸ் மினிட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்றில், கரேரலாவின் இந்தப் புகாரில் சத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவர் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட புகாராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்தப் புகாரில் அடிப்படை உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது.

அறிக்கை...

அறிக்கை...

இதுதொடர்பாக கேரள விவசாயப் பல்கலைக்கழகமும், கேரளா அனுப்பிய 3 பேர் கொண்ட கமிட்டியின் அறிக்கையும் இதை நிரூபிப்பதாக உள்ளது.

திராட்சையில் மட்டும்...

திராட்சையில் மட்டும்...

கேரள விவசாயப் பல்கலைக்கழகம், அக்டோபர், டிசம்பரில் நடத்திய ஆய்வின் முடிவில், 17 வகையான பழ வகைகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் பச்சை திராட்சையில் மட்டுமே பூச்சி மருந்து கலந்திருப்பதாக தெரிய வந்ததாம். மற்றவை நார்மலாகவே இருந்துள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவே...

அனுமதிக்கப்பட்ட அளவே...

பச்சை திராட்சையிலும் கூட க்ளோரோபைரிபோஸ் என்ற பூச்சி மருந்தின் அளவானது 0.5 பிபிஎம் என்ற அளவிலேயே இருந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவேயாகும்.

காய்கறிகள்...

காய்கறிகள்...

மேலும் 34 வகையான காய்கறிகளை பரிசோதித்ததில், 4-ல் மட்டுமே பூச்சி மருந்து இருந்தது தெரிய வந்தது. அதுவும் கூட அனுமதிக்கப்பட்ட அளவில்தான். அவை மிளகாய், பச்சை மிளகாய், கீரை மற்றும் கறிவேப்பிலை ஆகியவை. மற்றவற்றில் பூச்சி மருந்தே இல்லையாம்.

பீதி தேவையில்லை...

பீதி தேவையில்லை...

மேலும் கேரள அரசு இதுகுறித்து பீதி அடையத் தேவையில்லை என்றும் கேரள விவசாய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனராம். இதை கேரள அரசு அப்பட்டமாக ம்றைத்துள்ளது.

ஆர்கானிக் விவசாயம்...

ஆர்கானிக் விவசாயம்...

இருப்பினும் கேரள அரசு தனது பிடியில் நிலையாக இருக்கிறது. பூச்சி மருந்து இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறது. கேரளாவி்ல் ஆர்கானிக் விவசாயத்தை பிரபலப்படுத்தும் வகையிலேயே இதுபோல தவறான பிரச்சராம் மேற்கொள்ளப்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+