மீண்டும் கலவரம் வெடிக்கலாம்.. அச்சத்தில் பெங்களூருக்கு பஸ் சேவையை நிறுத்தும் கேரளா
திருவனந்தபுரம்: காவிரி விவகாரம் குறித்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் பெங்களூரில் கலவரம் நடக்கலாம் என அஞ்சி கேரள அரசுப் பேருந்துகள் நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகா தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 20ம் தேதி வரை திறந்துவிட உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதையடுத்து இன்று வரை தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டம் நீடித்து வருகிறது.
தமிழக பேருந்துகள் கர்நாடகாவுக்குள் செல்லாமல் ஓசூரோடு நிறுத்தப்படுகின்றன. காவிரி பிரச்சனையால் கலவரம் வெடித்தபோது கேரள அரசுப் பேருந்துகள் பல பெங்களூரில் சிக்கிக் கொண்டன. இதனால் கேரள அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி விவகார வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நாளை பெங்களூரில் கலவரம் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் பெங்களூருக்கான பேருந்து சேவையை நிறுத்துவதாக கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications