கேரள மாணவர் போராட்டத்தில் வன்முறை - கண்ணீ்ர் புகை குண்டு வீச்சால் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் போராட்டம நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் எஸ்.எப்.ஐ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வனமுறை வெடித்தது.

Kerala students protest on violence

கேரளாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் பொது பிரிவில் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத இட ஓதுக்கீடு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பல மருத்துவ கல்லூரிகளும் இந்த ஓதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. |இதை கண்டித்து திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு எஸ்.எப்.ஐ மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்த தலைமை செயலகம் நுழைவு வாயில் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மாணவர்கள் தடுபபு அரணை தாண்டி தலைமை செயலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்த போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டினர். இதனால ஆத்திரம் அடைந்த மாணவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் தலைமை செயலகம் முன்பு பதட்டமாக காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+