முத்தப் போராட்டத்துக்கு ஆதரவு... கட்டிப்பிடி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவ, மாணவிகள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் கல்லூரியில் நடந்த கட்டிபிடி போராட்டத்தில் பங்கேற்ற 10 மாணவ, மாணவிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோழிக்கோட்டில் ஒரு ஹோட்டலில் மாணவ, மாணவிகள் கட்டிபிடித்து கும்மாளம் இடுவதாக வெளியான தகவலை தொடர்ந்து அந்த ஹோட்டலை பாஜக இளைஞர் அணியினர் சூறையாடினர். இதை கண்டித்து கொச்சியில் முத்த பேராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜ, காங் உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை நடத்த கூடாது என தெரிவித்தனர்.

Kerala: Ten government college students suspended for organising “hug of love”

போராட்டத்தில் பங்கேற்க கொச்சி மரைன்டிரைவ் பகுதியில் ஏராளமான இளம் பெண்களும், ஆண்களும் குவிந்தனர். இதை தடுக்க சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையே முத்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்ததை கண்டித்து எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டிபிடி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்தை நடத்த கூடாது என கல்லூரி முதல்வர் பிரான்ஸசிஸ் எச்சரிக்கை செய்தார்.

இருப்பினும திட்டமிட்டப்படி போராட்டத்தை நடத்துவோம் என மாணவர்கள் தெரிவித்தனர். அதன் படி 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக பத்து மாணவ, மாணவிகளை ஒரு வார காலம் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+