Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttarakhand Floods: உத்தரகண்ட்டில் தென்னிந்திய சுற்றுலா பயணிகள் 28 பேர் மாயம்! வெள்ளம்+ நிலச்சரிவால் அதிகரிக்கும் அச்சம்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்றைய தினம் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் மிக மோசமான நிலச்சரிவும் ஏற்பட்டது. இதுவரை இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே உத்தரகண்ட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்த 28 கேரள சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளது இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

வட இந்தியாவில் இமயமலைக்கு அருகே அமைந்துள்ள மாநிலம் உத்தரகண்ட். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உத்தரகண்ட் மாநிலத்திற்கு மக்கள் சுற்றுலா செல்வார்கள். உத்தரகண்ட் மாநிலத்திற்கு பெரும்பாலும் ஆன்மீக சுற்றுலாவுக்குச் செல்வோரே அதிகம்.

Kerala Tourists Missing Amid Uttarakhand Flash Flood Havoc Rainfall Continues

28 பேர் மாயம்

உத்தரகண்ட்டில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் அங்குக் குறுகிய நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்து. மேலும், அதைத் தொடர்ந்த அங்கு நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதற்கிடையே இதில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அவர்களில் 20 பேர் மகாராஷ்டிராவில் வசிக்கும் கேரள மக்கள் என்றும், எஞ்சிய எட்டுப் பேர் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

மாயமானவர்களில் ஒரு தம்பதியரின் மகன், தனது பெற்றோரிடம் கடைசியாக வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பு காலை 8.30 மணியளவில் பேசியுள்ளார். அப்போது அவர்கள் உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்குப் புறப்படுவதாகத் தெரிவித்ததாகக் கூறினார். அவர்கள் சென்ற வழியில்தான் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அந்த மகன் குறிப்பிட்டார்.

தொடர்பு கொள்ள முடியவில்லை

ஹரித்வாரைச் சேர்ந்த ஒரு டூர் நிறுவனம் இந்த சுற்றுலாவை ஏற்படு செய்திருந்தது. 10 நாட்கள் உத்தரகண்ட்டின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டுள்ளனர். அந்த சுற்றுலா நிறுவனத்திற்கும் கூட கேரள சுற்றுலாப் பயணிகள் எங்கு இருக்கிறார்கள் என எதுவும் தெரியவில்லையாம். இது தொடர்பாக மாயமான தம்பதியின் உறவினர் பெண் கூறுகையில், "எங்களுக்குப் பயமாக இருக்கிறது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அந்த சுற்றுலா நிறுவனத்திடம் கேட்டாலும் கூட அவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

தெளிவாக தெரியவில்லை

அந்த பகுதியில் மொபைல் நெட்வோர்க் இல்லை.. மேலும் அங்கு மின் இணைப்பும் சீராக இல்லாததால் சார்ஜ் தீர்ந்திருக்கலாம் என்று நினைக்கிறோம். அவர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்தாலே போதும். ஆனால், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியாததால் தான் அச்சமாக இருக்கிறது" என்றார்.

5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை பிற்பகல் உத்தரகாண்டில் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட தாராலி பகுதியில் மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அங்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 150 பேர் இடிபாடுகளில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளால் தாராலி கிராமத்தின் கிட்டத்தட்டப் பாதி பகுதி சேறு, குப்பைகளால் மூடப்பட்டுள்ளது.

கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரிக்குச் செல்லும் வழியில் தாராலி கிராமம் ஒரு முக்கிய பகுதியாகும். இங்குப் பல ஹோட்டல்கள் மற்றும் ஹோம்களும் உள்ளன. வழக்கமாகச் சுற்றுலா செல்லும் மக்கள் இந்த கிராமத்தில் தான் தங்கிச் செல்வார்கள். இங்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+