"கடத்தல்காரர்கள்" தாக்கினார்கள், எங்களது போலீஸ் சுட்டது... சொல்கிறார் நாயுடு
திருப்பதி: போலீசார் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதாலேயே, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் நேற்று அம்மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களைக் கடத்தியதாகவும், அதைத் தடுக்க முற்பட்ட போது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாகவும் ஆந்திர போலீசார் விளக்கம் அளித்திருந்தனர். ஆனபோதும், இந்த துப்பாக்கிச் சூடு ஏற்கனவே திட்டமிடப் பட்ட ஒன்று என அம்மாநில எதிர்க்கட்சிகளே குற்றம் சாட்டி வருகின்றன.

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் போன் மூலமாக கேட்டறிந்தார் ராஜ்நாத் சித். அப்போது ராஜ்நாத் சிங்கிடம் சந்திரபாபு நாயுடு அளித்த விளக்கத்தில், ‘கொல்லப்பட்டவர்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், அதற்கான உரிய ஆதாரங்கள் ஆந்திர போலீசாரிடம் இருப்பதாகவும்' தெரிவித்துள்ளார்.
மேலும், செம்மரங்கள் வெட்டி கடத்தப்படவிருப்பதாக கிடைத்த தகவலின்படி, கடத்தல்காரர்களைக் கைது செய்ய திட்டம் வகுக்கப்பட்டதாகத் தெரிவித்த நாயுடு, கடத்தல்காரர்கள், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையே, உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க என்கவுண்டர் நடத்தப்பட்ட விதம், காயமடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை அறிக்கையாக அளிக்க இருக்கிறது ஆந்திர அரசு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications