பலாத்காரம் தொடர்பான முலாயம்சிங் பேச்சு- கிரண்பேடி கொந்தளிப்பு!!
டெல்லி: பலாத்காரம் தொடர்பான சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவின் கருத்துக்கு சமூக ஆர்வலர் கிரண்பேடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பையன்கள்.. தவறுகள் செய்வார்கள்.. அதற்காக பலாத்காரம் போன்ற சம்பவங்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பதா? பொய்யான பலாத்கார புகார் கொடுப்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்வோம் என்று முலாயம்சிங்யாதவ் பேசியிருந்தார்.
முலாயம்சிங் யாதவின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி முலாயம்சிங் யாதவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிரண்பேடி, இப்படி பேசுகிற அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும். முலாயம்சிங் யாதவின் பேச்சு பெண்களுக்கு மட்டும் எதிரானது அல்ல.. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கே எதிரானது. இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுப் போடாமல் தண்டிக்க வேண்டும்.