தெலுங்கானாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கிரண்குமார் ரெட்டி வழக்கு
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜூன் 2-ந் தேதி அதிகாரப்பூர்வமாக தெலுங்கானா மாநிலம் உதயமாக இருக்கிறது.

இந்நிலையில் தெலுங்கானா தனி மாநிலத்தை எதிர்த்து ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரஸை விட்டு விலகிய கிரண்குமார் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில்,. அரசியல் காரணங்களுக்காக ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுகிறது. அப்படி ஆந்திரா பிரிக்கப்படும் போது பொருளாதார அடிப்படையிலும், நதி நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதிலும் பிரச்னை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
கிரண்குமார் ரெட்டியின் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.












Click it and Unblock the Notifications