ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்தார் தேர்தல் வியூக நிபுணர் கிஷோர் பிரஷாந்த்
பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் கிஷோர் பிரஷாந்த் தற்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது கூட்டணி வேட்பாளர்களுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோடியுடன் தேர்தல் வியூக பணிகளை ஆற்றி வருபவர் கிஷோர் பிரஷாந்த் (41). இவரது வியூகம்தான் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மூலம் நாட்டின் பிரதமராக்கியது.

இந்த தேர்தல்களுக்கு பிறகு கிஷோருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு இடையே சிறிது கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து கிஷோர் அங்கிருந்து விலக நினைத்தார்.
இதையடுத்து அவர் இன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்பு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். அப்போது நிதிஷ் கட்சியினர் முன்பு கூறுகையில் இவர்தான் நமது எதிர்காலம் என்றார். பிரஷாந்த் ஒரு கட்சியில் இணைந்து பணியாற்ற போவது கடந்த வாரம் அவர் ஹைதராபாத்தில் மாணவர்களுடன் நடந்த உரையாடலின்போதே உறுதி செய்தார்.
நிதிஷ்குமாரின் சாணக்கியன் பிரஷாந்த் என்று அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்டது. பாஜகவுடன் நிதிஷ் கைகோர்த்தவுடனும் இது அப்படியே தொடர்ந்து வருகிறது. நிதிஷ் குமாருக்கும் லாலு பிரசாத்துக்கும் இடையே உள்ள மோதலை அமைதிப்படுத்தி நட்பை மீண்டும் ஏற்படுத்த முயற்சிகள் நடத்தப்பட்டன.
லாலு சிறையில் இருப்பதால் கட்சியை முழுக்க முழுக்க அவரது மகன் தேஜஸ்வியே பார்த்து கொள்வதால் இந்த சமாதான முயற்சி எடுப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை பிரஷாந்த் முன்னெடுத்து வெற்றி காண்பார் என்று கூறப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications