கே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது!
பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த யோகா குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருதுகளை அறிவித்துள்ளது.
டெல்லி: நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த யோகா குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த குடிமக்களை தேர்வு செய்து மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால்இன்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி திரைத்துறையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய கவுரமாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசு தேவ் உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசின் பத்ம விபூஷண்கள் விருது வழங்கப்படவுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சரத்பவார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முரளிமனோகர் ஜோஷி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உடுபி ராமச்சந்திர ராவ் ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுகளை பெறுகின்றனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தர் லால் பட்வா மற்றும்
மேகாலயாவை சேர்ந்த முன்னாள் லோக்சபா சபாநாயகர் பிஏ.சங்மா ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது. குடியரசு தினத்தன்று அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications