போலி பெயரில் பெங்களூர் லாட்ஜில் வேலை.. தேடப்பட்ட நாகாலாந்து தீவிரவாதி அதிரடி கைது
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பதுங்கியிருந்த நாகாலாந்து மாநில தீவிரவாத இயக்கமான நேஷனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலந்து அமைப்பின் முக்கிய பிரமுகரை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாகாலாந்து தலைநகர், கோகிமாவிலுள்ள இந்திராகாந்தி ஸ்டேடியம் அருகே, பஸ்சுக்காக காத்திருந்த அசாம் ரைஃபல் பாதுகாப்பு படையினர் மீது

4 பேர் கொண்ட தீவிரவாத கும்பல், ஏகே47 உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், ஒரு வீரர் கொல்லப்பட்டார், 3 பேர் காயங்களோடு தப்பினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 3வது நபரான 27வயதாகும், அடோஷே சோபே என்பவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக, என்.ஐ.ஏவுக்கு தகவல் கிடைத்தது.
பெங்களூர், எம்ஜிரோட்டிலுள்ள ஒரு லாட்ஜில் வேறு பெயரில் சோபே வேலை பார்த்த தகவலையடுத்து, பெங்களூர் போலீசாரின் உதவியோடு, சோபேயை என்.ஐ.ஏ அதிகாரிகள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications