கொல்கத்தா: மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மாலை 6.30 மணி அளவில் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் தகர்க்கப்படும் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
இதுபற்றி மெட்ரோ நிலைய அதிகாரிகள் நாங்கள் லால்பஷார் போலீஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மேலும், தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த மிரட்டல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications