கொல்கத்தா மருத்துவமனையில் இளம்பெண் பலாத்காரம் – இருவர் கைது

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்தவமனையில் வைத்து பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் ஆர்,ஜி கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வந்த 24 வயதுடைய இளம் பெண்ணை அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பலாத்காரம் செய்யப்பட்ட பெண் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பரம்பூரினைச் சேர்ந்தவர். இச்சம்பவம் தொடர்பாக லிப்டில் வேலை பார்க்கும் மசூம் அலிகான் மற்றும் ஹைதர் அலி ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் அடுத்த கட்ட விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.

"அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் இரண்டு குற்றவாளிகளையும் நாங்கள் கைது செய்துள்ளோம். இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

இந்த சம்பவத்தால் அம்மருத்துவமனை பெண் செவிலியர்களும், நோயாளிகளைக் காணவரும் பெண்களும் அதிர்ச்சியிலும், பயத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+