வெளியில் சொன்ன சுட்டு கொன்றுவேன்... மாணவியை மிரட்டி சீரழித்த ஆசிரியர்
பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். வெளியில் சொன்னால் சுட்டு கொன்று விடுவேன் என்று மிரட்டியே அந்த சிறுமியை சீரழித்திருக்கிறா
கொல்கத்தா: டியூசன் படிக்க வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று மிரட்டியே பல மாதங்களாக சீரழித்துள்ளான் அந்த கயவன். கொல்கத்தாவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மேகலாவிற்கு ( பெயர் மாற்றம்) அறிவியல் என்றாலே கசக்கும். கஷ்டமா இருக்கே என்று வீட்டில் சொல்லவே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அறிவியல் பாடத்திற்காக ராஜீவ் சக்கரவர்த்தி என்ற ஆசிரியரிடம் டியூசனுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களாகவே மகளின் உடல் நிலையிலும் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டதை பார்த்த பெற்றோர்கள் சந்தேகமடைந்தனர். டியூசன் படிக்க பிடிக்கலையோ என்று நினைத்து பேசாமல் இருந்தனர்.

எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, அடம் பிடிப்பது என மேகலாவிடம் பிரச்சினைகள் அதிகரித்தன. என்னவாக இருக்கும் என்று யோசித்த பெற்றோர்கள் மேகலாவிடம் பேச்சு கொடுத்தனர். வெடித்து கதறிய மேகலா தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதைக் கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டியூசன் படிக்கப் போன இடத்தில் அந்த கயவன் தொடக்கூடாத இடத்தில் தொட்டு பேசுவான், நாளாக நாளாக அவனது பாலியல் தொந்தரவு அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக அவனது பாலியல் இச்சைக்கு தன்னை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டான் என்று பெற்றோரிடம் கூறினாள் மேகலா.
தான் செய்யும் காரியத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் சுட்டுக்கொன்று விடுவேன் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டியே காரியத்தை சாதித்ததாக கூறினாள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதல் மனசுக்குள் புழுங்கிய மேகலா, மன அழுத்தத்திற்கு ஆளாகி யாரிடமும் பேசாமல் ஒதுங்கியதாக மகள் கூறியதைக் கேட்டு பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.
மேகலா உடன் காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர்கள், டியூசன் ஆசிரியர் சக்ரவர்த்தி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் டியூசன் ஆசிரியரை கைது செய்து போஸ்கோ சட்டம், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்திய போலீசார் எட்டு நாட்கள் போலீஸ் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications