கோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்?.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்வி
கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்தும் கூட, விமானத்தை அவசரப்பட்டு தரையிறங்கியது ஏன் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு: கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்தும் கூட, விமானத்தை அவசரப்பட்டு தரையிறங்கியது ஏன் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. மழை காரணமாகவும், குறுகிய விமான ஓடுபாதை காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இந்தவிபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். நேற்று துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் வழுக்கி ஓடி , இரண்டாக பிளந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. விமானத்தின் பைலட்கள் இருவரும் இந்த விபத்தில் பலியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கேள்வி
இந்த நிலையில் கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்தும் கூட, விமானத்தை அவசரப்பட்டு தரையிறங்கியது ஏன் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், கோழிக்கோடு விமான விபத்து குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. இதில் சில சந்தேங்கள் உள்ளது.

பதில்கள் வரவில்லை
இன்னும் பல கேள்விகளுக்கு இதில் பதில் கிடைக்கவில்லை. விசாரணைக்கு பின்பே இதில் பதில் கிடைக்கும். விசாரணை தற்போது நடந்து வருகிறது. அதுவரை எந்த வதந்தியையும் நம்ப கூடாது முழுவதுமாக விசாரணை முடியும் வர காத்து இருக்க வேண்டும். பொய்யான தகவல்களை யாரும் பரப்ப கூடாது .

கருப்பு பெட்டி
விமானத்தின் கருப்பு பெட்டியை பறிமுதல் செய்து இருக்கிறோம். எனக்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது. விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்துள்ளது. விமானத்துறை அதிகாரிகள் உடன் இது தொடர்பாக கேள்வி எழுப்பினேன். அவர்கள் கொடுத்த பதிலின் படி, அந்த விமானத்தில் எரிபொருள் போதுமான அளவு இருந்தது உறுதியாகிறது.

ஆனால் என்ன
ஆனாலும் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானி நினைத்து இருந்தால் வேறு விமான நிலையத்திற்கு சென்று இருக்கலாம் .இதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக மீடியாக்கள் நிறைய விஷயங்களை தெரிவித்து வருகிறது. ஆனால் சில விஷயங்கள் நம்பும்படி இல்லை. எரிபொருள் இருந்தும் ஏன் விமானம் அவசரமாக மழையில் தரையிறக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதைத்தான் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications