நிலக்கரி வழக்கில் எப்.ஐ.ஆர்.. கவலை இல்லை: ப.சிதம்பரத்தை சந்தித்த குமார்மங்கலம் பிர்லா பேட்டி

Subscribe to Oneindia Tamil

Kumar Mangalam Birla to meet Chidambaram
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தம் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது குறித்து கவலை இல்லை என்று தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா கருத்து தெரிவித்துள்ளார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக குமாரமங்கலம் பிர்லா மீது சிபிஐ அண்மையில் வழக்குப் பதிவு செய்தது. அவர் மட்டுமின்றி அவரது ஹிண்டால்கோ நிறுவனம், நிலக்கரி துறை முன்னாள் செயலர் பிரகாஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஹிண்டால்கோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மாலை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை குமார்மங்கலம் பிர்லா சந்தித்துப் பேசினார். தம் மீதான வழக்கு குறித்தே குமார் மங்கலம் பிர்லா சிதம்பரத்துடன் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமார் மங்கலம் பிர்லா, நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். என் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். போட்டிருப்பது குறித்து கவலைப்படவில்லை என்றார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிக்கிய தொழிலதிபர், நிதி அமைச்சரை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+