திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது
திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார்.
மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க. அறிவித்திருந்தது.

ஆனால், சிதம்பரத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில், அங்கு போராட்டம் நடத்துவதற்காக சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த குஷ்பு சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
- மநுதர்ம நூல் என்றால் என்ன? அது என்ன சொல்கிறது, ஏன் வந்தது?
- 'மநுநீதியை பாஜக ஆதரித்து பேசவில்லை; அதை பின்பற்றி யாரும் வாழவில்லை' - குஷ்பு
அவரை முட்டுக்காடு அருகே வழிமறித்து காவல்துறையினர் கைதுசெய்தனர். அதேபோல, போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்த பா.ஜ.கவின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவனை ஆத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துறை கைதுசெய்துள்ளது.
"பெண்களின் கண்ணியத்திற்காக இறுதிவரை போராடுவோம். பிரதமர் நரேந்திர மோதி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் பேசுவார். நாங்கள் அவர் பாதையில் செல்கிறோம். சில சக்திகளின் அராஜகங்களுக்கு அடிபணிய மாட்டோம்" என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் "வி.சி.க. கோழைகள். மகிழ்ச்சியடையாதீர்கள். இது உங்கள் தோல்வி. நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சக்தி என்பதால்தான் கைதுசெய்யப்பட்டுள்ளோம். நாங்கள் அடிபணிய மாட்டோம்" என்று கூறியிருக்கிறார்.
தங்களை கைதுசெய்திருப்பது அரசின் கையாலாகாத்தனம் என கே.டி. ராகவன் கூறியிருக்கிறார். "இந்து மதத்தை இழிவு படுத்திய திருமாவளவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய சிதம்பரம் செல்லும் குஷ்பூ அவர்களையும், என்னையும் கைது செய்திருப்பது அரசின் கைலாகாத்தனத்தை காட்டுகிறது." என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சிதம்பரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க., வி.சி.க.வைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- மும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்
- சிரியாவில் மீண்டும் தொடங்குகிறதா போர்? - ரஷ்ய வான் தாக்குதலில் 78 பேர் பலி
- KKR vs KXIP: தொடர்ந்து 5ஆவது வெற்றியை பதிவு செய்து பஞ்சாப் அசத்தல்
- ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி: 'இளைஞர்கள் - வயோதிகர்களின் எதிர்ப்பணுக்கள் மேம்பாடு'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












Click it and Unblock the Notifications