திருப்பதியிலேயே லட்டு இல்லையா?
அமராவதி: திருப்பதியில் லட்டு பிரசாத விநியோகம் சில மணிநேரம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லட்டு என்றால் நமக்கு நினைக்கு வருவது திருப்பதி தான். அவ்வாறு இருக்கையில், திருப்பதியில் எழுமலையானை தரிசனம் செய்துவிட்டு லட்டு வாங்கிவிட்டு வரும் பக்தர்கள் ஏராளம். இந்நிலையில் திருமலையில் நேற்று காலை திடீரென லட்டு தட்டுப்பாடு நிலவியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சில மணி நேரம் விநியோகம் நிறுத்தப்பட்டதால், லட்டு பிரசாதம் வாங்க வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் ஆத்திரமடைந்தனர். மேலும் லட்டு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே அங்கு கள்ளத் தனமாக லட்டு விற்பனை செய்யப்படுகிறதாகவும், புரோக்கர்கள் சிலர் அதிக விலைக்கு லட்டு விற்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டினர். அப்போது, தேவஸ்தானத்திற்கு வந்த அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டியிடம், இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக லட்டு விநியோக மையத்திற்கு சென்ற அவர், அங்கு விசாரணை நடத்தியுள்ளார். இதன் பின்னரே லட்டு வழக்கம் போல விநியோகிப்பட்டது. திடீரென சில மணி நேரம் லட்டு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications