ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய பெண் ஹைதராபாத்தில் சிக்கினார்!
ஹைதராபாத்: உலகின் மிகக் கொடூரமான இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய பெண் நிக்கி ஜோசப்பை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான மொகிதீன் சல்மான், சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். அவர் சில காலம் அமெரிக்காவில் படித்தவர்.

ஹைதராபத்தில் இருந்து சிரியா செல்வதற்காக மொகிதீன் சல்மான் புறப்பட்ட போது போலீசார் அவரை மடக்கி கைது செய்தனர். அவரிடம் அப்போது நடத்திய விசாரணையில் சிரியா செல்வதற்கு முன்பாக துபாய் சென்று தனது காதலி நிக்கி ஜோசப்பை திருமணம் செய்து கொள்ளவும் மொகிதீன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் துபாயில் இருந்து இந்தியாவுக்கு வியாழன்று இரவு நிக்கி ஜோசப் நாடு கடத்தப்பட்டார். அவரை ஹைதராபாத் விமான நிலையத்திலேயே போலீசார் மடக்கினர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications