மோடி மனக்குருடு, ஊமை, செவிடு: லாலுவின் மகன் கடும் சாடல்
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனதளவில் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது, வாயும் பேச முடியாது என்று விமர்சித்துள்ளார்.
பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்தில் அதிகாரமிக்கவர்கள் தங்களின் உறவினர்களுக்கு செய்து கொடுக்கும் வசதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்றார்.
இந்நிலையில் இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
PM is not only deaf & dumb but mentally blind also.Mr Modi Ji don't be so shrewd tht u can’t see the Bhai-Bhtizawad of ur own party & allies
— Tejashwi Yadav (@yadavtejashwi) November 1, 2015
பிரதமருக்கு காது கேட்காதது மற்றும் வாய் பேச முடியாதது மட்டும் அல்ல மனதளவில் கண்ணும் தெரியாது. உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களின் உறவினர்களுக்கு உதவி செய்வது உங்களுக்கு தெரியாதது போன்று விவேகமாக இருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேஜஸ்வி மேலும் கூறுகையில்,
இந்த மனிதர் அளவுக்கு மீறி பொய் கூறுகிறார், நாடகம் ஆடுகிறார். அவரது பதவியை அவமதித்துவிட்டார். அதனால் தற்போது பீகார் அவருக்கு பாடம் கற்பிக்கும் என்றார்.