ம.பி சிவன் கோவில் நிலச்சரிவில் சிக்கி 3 பக்தர்கள் பலி; முழு வீச்சில் மீட்புப்பணி
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒன்றின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மபி, ஜபல்பூர் அருகே அமைந்துள்ள மாவட்டம் சிந்த்வாரா. இங்கு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. பொதுவாகவே வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக மபியைச் சுற்றியுள்ள சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
4-5 people believed to be trapped after a landslide near Shiv Temple in Chhindwara(MP) pic.twitter.com/BTG5oWI7LG
— ANI (@ANI_news) March 7, 2016
இந்நிலையில் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.பக்தர்கள் கூட்டம் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் 5 பக்தர்கள் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அவர்களை மீட்க மத்திய பிரதேச மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். இதுகுறித்த மேலும் தகவல்கள் சேகரிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் பலியானவர்கள் விவரம் தெரியவந்து உள்ளது. டோலி பாண்டே, நிகிதா பாண்டே, சர்தீப் ஆகிய 3 பேர் இந்நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர்.