தமிழர்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை: இலங்கை ராணுவம் மறுப்பு!
Subscribe to Oneindia Tamil
இலங்கை: இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என அந்நாட்டு ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் ருவான் வனிகசூர்யா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமுகம் அழுத்தம் கொடுப்பது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
இலங்கையில் தமிழகர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியில் ரோந்து பணிகளை ராணுவ அதிகரித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது.யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
''தீவிரவாதத்திற்கு எதிராக 25 ஆண்டுகளாக நடைபெற்ற சண்டையில் ரசாயன ஆயுதங்கள் மற்றும் கொத்து குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications