யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உ.பி-யில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு.. மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா: உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து, வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இதுவரை வன்முறை மற்றும் கும்பலாக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் சிக்கி அம்மாநிலத்தில் 1,100 பேர் பலியாகியுள்ளதாக மம்தா கூறியுள்ளார்

கடந்த 17ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் ஏற்பட்ட நிலத்தகராறில் 10 பழங்குடியின மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி, சாலையில் அமர்ந்து தர்ணா தனது தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் கலவரம் வெடித்தால் பாஜக-வினர் உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைக்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேச சம்பவங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர்.
எனவே உத்தரப்பிரதேசத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக உண்மை கண்டறியும் குழு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களை அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டனர் என சாடியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம் நடத்தியதில் தவறேதும் இல்லை என்றும் மம்தா கூறியுள்ளார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications