டெல்லி கற்பழிப்பு வழக்கு: 2 குற்றவாளிகளின் வக்கீல்கள் வழக்கிலிருந்து திடீர் விலகல்
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் இருவர் சார்பில் வாதாடி வந்த இரண்டு வழக்கறிஞர்கள் திடீரென வழக்கிலிருந்து தாமாகவே விலகியுள்ளனர்.
டெல்லியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சிறை வளாகத்திலேயே குற்றவாளி ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். பின்னர் மீதமுள்ள 5 குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, மற்ற 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை பெற்ற 4 பேரில், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோர் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளான முகேஷ் மற்றும் பவன்குமார் குப்தா இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.
இந்நிலையில், முகேஷ் மற்றும் பவன்குமார் குப்தா ஆகியோரின் வழக்கறிஞர்களான வி.கே.ஆனந்த் மற்றும் விவேக் சர்மா ஆகியோர் அதிரடியாக தாங்கள் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து வி.கே.ஆனந்த் ஹைகோர்ட்டில் நேற்று ‘தனது பணியில் குற்றவாளியின் குடும்பத்தினரும், சில வழக்கறிஞர்களும் குறுக்கிடுவதாகவும், எனவே தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். இதனை நீதிபதிகள் ஏற்றனர்.
இதேபோல் பவன் குமாரின் வழக்கறிஞரான விவேக் சர்மா, தொலைபேசி மூலம் தனது விலகலை கோர்ட்டுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குற்றவாளிகளான முகேஷ் மற்றும் பவன்குமாரின் வழக்கறிஞர்கள் திடீரென விலகியதையடுத்து, அவர்களுக்காக பாரபட்சமற்ற ஆலோசகரை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications