டெல்லி கற்பழிப்பு வழக்கு: 2 குற்றவாளிகளின் வக்கீல்கள் வழக்கிலிருந்து திடீர் விலகல்
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் இருவர் சார்பில் வாதாடி வந்த இரண்டு வழக்கறிஞர்கள் திடீரென வழக்கிலிருந்து தாமாகவே விலகியுள்ளனர்.
டெல்லியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சிறை வளாகத்திலேயே குற்றவாளி ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். பின்னர் மீதமுள்ள 5 குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, மற்ற 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை பெற்ற 4 பேரில், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோர் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளான முகேஷ் மற்றும் பவன்குமார் குப்தா இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.
இந்நிலையில், முகேஷ் மற்றும் பவன்குமார் குப்தா ஆகியோரின் வழக்கறிஞர்களான வி.கே.ஆனந்த் மற்றும் விவேக் சர்மா ஆகியோர் அதிரடியாக தாங்கள் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து வி.கே.ஆனந்த் ஹைகோர்ட்டில் நேற்று ‘தனது பணியில் குற்றவாளியின் குடும்பத்தினரும், சில வழக்கறிஞர்களும் குறுக்கிடுவதாகவும், எனவே தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். இதனை நீதிபதிகள் ஏற்றனர்.
இதேபோல் பவன் குமாரின் வழக்கறிஞரான விவேக் சர்மா, தொலைபேசி மூலம் தனது விலகலை கோர்ட்டுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குற்றவாளிகளான முகேஷ் மற்றும் பவன்குமாரின் வழக்கறிஞர்கள் திடீரென விலகியதையடுத்து, அவர்களுக்காக பாரபட்சமற்ற ஆலோசகரை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications