தேர்தல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் அதை ஏற்க வேண்டும்: ஜஸ்வந்த்சிங்குக்கு ஜேட்லி மறைமுக அட்வைஸ்
டெல்லி: தேர்தல் வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் அதை ஏற்கும் மனநிலையையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்திசிங்குக்கு மற்றொரு பாஜக தலைவர் அருண் ஜேட்லி மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமது இணையப் பக்கத்தில் அருண் ஜேட்லி எழுதியுள்ளதாவது:
ஒரு அரசியல் கட்சி என்பது பல லட்சக்கணக்கான தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. அவர்களும் அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சூழலில் சில அரசியல் தலைவர்களை தேர்தல் காலங்களில் பயன்படுத்திக் கொள்ளாமல் முடியாமலும் போகலாம்.

தேர்தல் காலத்தில் போட்டியிட சீட் கொடுக்கப்படாவிட்டால் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதுதான் சரியானதாக இருக்க முடியும். அந்த தருணம்தான் அந்த தலைவரின் விசுவாசத்தையும் நேர்மையையும் சோதிக்கும் நேரம்.
அப்படியான நேரங்களில் தனக்கோ வாரிசுகளுக்கோ சீட் மறுக்கப்படுவதை ஏற்கக் கூடிய மனப்பக்குவமும் அவசியம் அந்த தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.
இவ்வாறு அருண் ஜேட்லி தமது இணைய பக்கத்தில் எழுதியுள்ளது.












Click it and Unblock the Notifications