டெல்லியில் இடதுசாரிகளின் மாநாடு.. மாநிலக் கட்சிகள் பங்கேற்பு..3வது அணி உதயம்?

Subscribe to Oneindia Tamil

Left convention in Delhi a reflection of future Third Front!
டெல்லி: டெல்லியில் இடதுசாரிகள் ஏற்பாடு செய்திருக்கும் மதவாதத்துக்கு எதிரான மாநாட்டில் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, அசாம் கனபரிஷத், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இடதுசாரிகளுடன் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இருப்பது தேசிய அளவிலில் 3வது அணி உதயமாகிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வார்டு பிளாக் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் ஆகிய 4 இடதுசாரி கட்சிகளும் மதவாதத்துக்கு எதிரான மாநாட்டை இன்று நடத்தியது. இம்மாநாட்டில் பங்கேற்க பல மாநில கட்சிகளுக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.

இதை ஏற்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ்குமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் ஆகியோருடன் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. திரிபாதியும் கலந்து கொண்டிருக்கிறார்.

மேலும் அதிமுக, அசாம்கன பரிஷத், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய நிதீஷ்குமார், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். பீகாரில் இருந்து டெல்லியில் குடியேறி இருக்கும் தொழிலாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் டெல்லியே முடங்கிப் போய்விடும் என்று எச்சரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+