இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி இல்லை என மேல்மட்டத்தில் மாற்றிவிட்டனர்: மாஜி உள்துறை செயலாளர் பிள்ளை
டெல்லி: குஜராத் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி இல்லை என்று நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில் அரசியல் தரப்பில் அதாவது மேல்மட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் அப்பாவி என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் வாக்குமூலம் அளித்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி இஷ்ரத் ஜஹான் தங்கள் அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறுகையில்,
இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குஜராத் நீதிமன்றத்தில் இரண்டு முறை அபிடவிட் தாக்கல் செய்தது. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட முதல் அபிடவிட்டில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இரண்டு மாதத்தில் மற்றொரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது அபிடவிட்டில் இஷ்ரத் உள்ளிட்டோர் தீவிரவாதிகள் என்ற வார்த்தை நீக்கப்பட்டது. இரண்டாவது அபிடவிட் அரசியல் தரப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நான்கு பேருக்கும் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அபிடவிட்டில் அவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று என் அளவில் இல்லை மாறாக உயர்மட்ட அளவில் மாற்றப்பட்டதால் அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இது குறித்து உங்களுக்கு ஏதாவது விளக்கம் வேண்டுமானால் மாற்றம் செய்த அரசியல் தரப்பை கேளுங்கள் என்றார்.
ஜி.கே. பிள்ளை ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கையில் அவரது துறையின் செயலாளராக இருந்தவர். இந்நிலையில் பிள்ளையின் கருத்து குறித்து சிதம்பரம் கூறுகையில்,
முதலாவது அபிடவிட்டில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் தீவிரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உளவுத் துறையோ தங்களின் வேலை உளவு பார்ப்பது தான் எனவும், யார் மீதும் குற்றம் சுமத்துவது இல்லை என்றும் தெரிவித்தது.
நாங்கள் யாரையும் தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டவில்லை என உளவுத் துறை தெரிவித்தது. இதையடுத்து உளவுத் துறையின் சரியான நிலைப்பாட்டை தான் இரண்டாவது அபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டது என்றார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications