தீவிரவாத நடவடிக்கையை தடுக்க 1500 'ஜேம்ஸ்பாண்டுகளை' களமிறக்குகிறது இந்தியா!
டெல்லி: பிரிட்டன் வரிசையில், இந்தியாவும் தனது உளவுத்துறை பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, இங்கிலாந்து அரசு தனது உளவாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. உளவுத்துறையால் முன்கூட்டியே பாரீஸ் தாக்குதலை கணிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, பலத்தை அதிகரிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தின், MI5 மற்றும் MI6 உளவு அமைப்புகளுக்கும், GCHQ உளவு அமைப்புக்கும் ஆட்களை அதிகம் நியமிக்க உள்ளது இங்கிலாந்து. சுமார் 1900 பேர் புதிதாக உளவுத்துறையில் இணைவார்கள் என்று தெரிகிறது.

இதே நிலை இந்தியாவிலும் உள்ளது. இந்தியா தனது உளவாளிகள் எண்ணிக்கையை மேலும் சுமார் 1500 என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு சில காரணங்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாக நடைபெறும், தீவிரவாத கருத்து பரிமாற்றங்களை கண்காணிப்பது தற்போதுள்ள உளவாளிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. அவர்கள் ஆயுத பயிற்சி, உளவு பயிற்சி பெற்றவர்கள் என்றபோதிலும், இணையதள விவகாரங்களில் பயிற்சி மற்றும் கல்வியறிவு இல்லாதவர்கள்.
எனவே, புதிய உளவாளிகள் பலரும் இணையத்தை தாராளமாக கையாளுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், தற்போதுள்ள கம்ப்யூட்டர், விவரம் தெரிந்த உளவாளிகள் அனைவரையும், அதே பணிக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு வேறு வேலைகளும் உள்ளன. எனவே, புதிதாக திறமைமிக்கவர்களை பணிக்கு அமர்த்தப்படுவது அசியமாகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications