தீவிரவாத நடவடிக்கையை தடுக்க 1500 'ஜேம்ஸ்பாண்டுகளை' களமிறக்குகிறது இந்தியா!
டெல்லி: பிரிட்டன் வரிசையில், இந்தியாவும் தனது உளவுத்துறை பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, இங்கிலாந்து அரசு தனது உளவாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. உளவுத்துறையால் முன்கூட்டியே பாரீஸ் தாக்குதலை கணிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, பலத்தை அதிகரிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தின், MI5 மற்றும் MI6 உளவு அமைப்புகளுக்கும், GCHQ உளவு அமைப்புக்கும் ஆட்களை அதிகம் நியமிக்க உள்ளது இங்கிலாந்து. சுமார் 1900 பேர் புதிதாக உளவுத்துறையில் இணைவார்கள் என்று தெரிகிறது.

இதே நிலை இந்தியாவிலும் உள்ளது. இந்தியா தனது உளவாளிகள் எண்ணிக்கையை மேலும் சுமார் 1500 என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு சில காரணங்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாக நடைபெறும், தீவிரவாத கருத்து பரிமாற்றங்களை கண்காணிப்பது தற்போதுள்ள உளவாளிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. அவர்கள் ஆயுத பயிற்சி, உளவு பயிற்சி பெற்றவர்கள் என்றபோதிலும், இணையதள விவகாரங்களில் பயிற்சி மற்றும் கல்வியறிவு இல்லாதவர்கள்.
எனவே, புதிய உளவாளிகள் பலரும் இணையத்தை தாராளமாக கையாளுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், தற்போதுள்ள கம்ப்யூட்டர், விவரம் தெரிந்த உளவாளிகள் அனைவரையும், அதே பணிக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு வேறு வேலைகளும் உள்ளன. எனவே, புதிதாக திறமைமிக்கவர்களை பணிக்கு அமர்த்தப்படுவது அசியமாகிறது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications