உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து.. உத்தரகாண்டிலும் சர்ச்சையை கிளப்பும் கான்வர் யாத்திரை ஆர்டர்!
டேராடூன்: சிவபக்தர்கள் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்களுக்கு முக்கிய உத்தரவை உத்தரகாண்ட் அரசு பிறப்பித்திருக்கிறது. அதாவது உணவகத்தின் உரிமையாளர் பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரி ஆகியவை உணவகங்களின் பெயர் பலகையில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஆண்டுதோறும் காவடி திருவிழா நடைபெறும். இதனை கன்வார் யாத்திரை என்று கூறுவார்கள். சிவ பக்தர்கள் காவடியை சுமந்துக்கொண்டு புனித நதியாக கருதப்படும் கங்கைக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து புனித நீரை கலங்களில் கொண்டு செல்வார்கள். இப்படி கொண்டு செல்லப்படும் புனித நீரை கொண்டு தங்கள் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான காவடி திருவிழா தொடங்கியுள்ளது.

இப்படி இருக்கையில் கங்கை நோக்கி செல்லும் பக்கதர்களுக்காக, இந்த வழித்தடங்களில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயர் பலகைகளிலும், அதன் உரிமையாளர் பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரி இடம்பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது. முதல்கட்டமாக முசாஃபர் நகர் மாவட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறத. விரைவில் மாநிலம் முழுவதும் இது அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக பொருளாதார தடைகளுக்கு சமமாக இந்த உத்தரவு இருக்கிறது என விமர்சித்துள்ளனர். பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்திலிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, "மதம் மற்றும் சாதிய ரீதியில் எந்த உத்தரவும் இருக்கக்கூடாது. உ.பியின் பைசாஃபாத் நகரில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் எனவே அதை வாபஸ் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பஸ்வான், "சாதி, மதம் அடிப்படையிலான எந்த பிளவையும் ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தரப்பில், "இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிப்பதை நோக்கமாக கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது" என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார்.
இவ்வளவு எதிர்ப்புகள் எழுந்திருந்தாலும், உத்ரகாண்டடிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. ஹரித்துவாருக்கு காவடி எடுத்துச் செல்வோருக்கு உதவியாக இந்த உத்தரவு இருக்கும் என்று அம்மாநில ஆளும் கட்சி தலைவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications