Uttarkhand Glacier Live: உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி எனும் பனியாறு உருகியது. இதையடுத்து அலக்நந்தா நதிப்பாலம் சேதமடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Recommended Video

    பனிப்பாறையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 10 பேரின் உடல்கள் மீட்பு... தொடர்ந்து மீட்பு பணி தீவிரம்!

    அப்போது அங்கு ரிஷிகங்கா மின் திட்டத்திற்காக பணியாற்றி வந்த 100 முதல் 150 தொழிலாளர்களின் நிலை என்னவென தெரியவில்லை. மின் திட்டப்பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி அந்த 150 பேரையும் தொடர்பு கொள்ள முடியாததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    Feb 08, 2021, 2:58 pm IST

    உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு - சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம். தபோவனிலுள்ள 250 மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியிருக்கலாம் என தகவல். சுரங்கத்தில் சிக்கியிருந்த 12 பேர் இதுவரை பத்திரமாக மீட்பு.
    Feb 08, 2021, 12:32 pm IST

    பனிப்பாறை வெடிப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரகண்ட்டிற்கு ஆராய்ச்சியாளர்கள் விரைந்துள்ளனர். டிஆர்டிஓ மையத்தின் பனிச்சரிவு ஆய்வு பிரிவினர் டேராடூனுக்கு சென்றுள்ளனர். உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பலர் உயிரிழப்பு.
    Feb 08, 2021, 10:34 am IST

    உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்வீட். இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் -போரிஸ் ஜான்சன். இந்தியாவுடன் பிரிட்டன் துணை நிற்கும் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். எனது சிந்தனை முழுவதும் மீட்புப் பணிகள் குறித்தே உள்ளது - போரிஸ் ஜான்சன்.
    Feb 07, 2021, 6:57 pm IST

    உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி. உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் உறுதி. உள்துறை அமைச்சர், குடியரசு தலைவரும் நிலைமையை கேட்டறிந்தனர் - திரிவேந்திர சிங் ராவத்.
    Feb 07, 2021, 6:30 pm IST

    தபோவனம் அணை அருகே சுரங்க வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 16 பேர் மீட்பு. சமோலி மாவட்டத்தில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்தது. தொழிலாளர்களை இந்தோ-திபெத் எல்லை படையினர் பத்திரமாக மீட்டனர்.
    Feb 07, 2021, 5:55 pm IST

    உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு டுவிட். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். நெருக்கடியை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன - துணை குடியரசுத் தலைவர்.
    Feb 07, 2021, 4:49 pm IST

    சமோலி மாவட்டத்தில் தபோவனம் அணை அருகே சுரங்கத்தை சூழ்ந்த வெள்ளம். சுரங்கத் தொழிலாளர்கள் 16 முதல் 17 பேர் வரை வெள்ளத்தில் சிக்கிய அபாயம். இந்தோ திபெத் எல்லை படையினர் மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
    Feb 07, 2021, 4:35 pm IST

    உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை தொடர்பு கொண்டு பேசினார் நிதிஷ். உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு குறித்து கேட்டறிந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் நலமுடன் மீட்கப்பட பிரார்த்திக்கிறேன். பீகாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உத்தரகண்ட் மாநில மக்களுக்கு பீகார் மக்கள் துணையிருப்பார்கள்.
    Feb 07, 2021, 4:34 pm IST

    உத்தரகண்ட்டில் தபோவனம் அருகே பனிப்பாறையால் நீர் மின் திட்ட கட்டுமான பணிகள் சேதம். மாவட்ட நிர்வாக உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    Feb 07, 2021, 4:14 pm IST

    உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ட்வீட். பேரழிவை ஏற்படுத்தியுள்ள பனிபறை வெடிப்பு குறித்த செய்தி கவலை அளிக்கிறது - குடியரசுத் தலைவர். அங்கு சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்பிற்காகப் பிரார்த்திக்கிறேன் - குடியரசுத் தலைவர்
    Feb 07, 2021, 4:00 pm IST

    உத்தரகண்ட் பனிப்பாறை வெள்ளப்பெருக்கால் சிக்கிய 9 பேரின் உடல்கள் மீட்பு. சம்தோலி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 9 பேரது உடல்கள் மீட்பு. ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் அடித்துச் செல்லப்பட்ட பல வீடுகள்.
    Feb 07, 2021, 3:23 pm IST

    உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக ராகுல் காந்தி ட்வீட். சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மிகவும் கவலையளிக்கிறது. மீட்புப் பணிகளில் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் நிற்பார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உடனடியாக உதவ வேண்டும் - ராகுல் காந்தி.
    Feb 07, 2021, 3:11 pm IST

    ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் அடித்துச் செல்லப்பட்ட பல வீடுகள். மீட்பு பணிகளில் 200 க்கும் மேற்பட்ட இந்திய திபெத் எல்லை போலீஸார். ஹரித்துவாரில் வெள்ள அபாய எச்சரிக்கை.
    Feb 07, 2021, 3:09 pm IST

    உத்தரகண்ட் பனிப்பாறையால் வெள்ளப்பெருக்கில் மூவர் உடல் மீட்பு. சம்தோலி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேரது உடல்கள் மீட்பு.
    Feb 07, 2021, 3:06 pm IST

    தபோவன் பகுதியில் 3 பேர் உடல்கள் மீட்பு. தொழில்நுட்ப படையினரும் சம்பவ இடத்திற்கு விரைவு. அனைவரும் உயிரிழந்திருக்கலாம் : தலைமை செயலாளர் அச்சம்.
    Feb 07, 2021, 3:02 pm IST

    வெள்ளம், மீட்புப் பணிகள் பற்றி ராணுவத்தினருடன் ஆலோசனை. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம். 2 அவசர கால மருத்துவ குழுக்களும் விரைவு.
    Feb 07, 2021, 2:59 pm IST

    சம்பவ இடத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ஆய்வு. சமோளி மாவட்டத்தில் ரெட் அலார்ட் : உத்திரகாண்ட் தலைமை செயலாளர்.
    Feb 07, 2021, 2:34 pm IST

    உத்தரகாண்ட் இயற்கை பேரிடர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு குறித்து, முதல்வர் டி.எஸ். ராவத்துடன் பேசினேன். அனைத்து தரப்பு அதிகாரிகளும், வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்டிற்கு தேவையான அனைத்த உதவிகளும் செய்யப்படும்: அமித்ஷா உறுதி.
    Feb 07, 2021, 2:33 pm IST

    மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்
    Feb 07, 2021, 2:28 pm IST

    உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட். உத்தரகாண்ட்டின் துரதிர்ஷ்டவசமான நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் நிற்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக தேசம் பிரார்த்தனை செய்கிறது : பிரதமர் மோடி.
    Feb 07, 2021, 2:28 pm IST

    உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரைகளில் எச்சரிக்கை நடவடிக்கை. உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதிக்கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
    Feb 07, 2021, 2:27 pm IST

    வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட ஜோஷிமத்- மலாரி பாலம். எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினரால் மலாரி பாலம் பயன்படுத்தப்படுகிறது.
    Feb 07, 2021, 2:23 pm IST

    ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கு அருகில் உள்ள பகுதி மக்கள் வெளியேற்றம். சமோலி மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழும் அபாயம். ரிஷிகேஷில் கடைகளை மூடிவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
    Feb 07, 2021, 2:17 pm IST

    உத்தரகண்ட் பனிப்பாறை உருகி கடும் வெள்ளப்பெருக்கு குறித்த தகவல்களை பெற உதவி எண்கள். 1070 அல்லது 9557444486 என்ற எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்- மாவட்ட நிர்வாகம்.
    Feb 07, 2021, 2:16 pm IST

    அதிகாரிகளிடம் நடந்தது குறித்து கேட்டறிந்த உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத். பழைய வெள்ள வீடியோக்களை சமூகவலைதளங்களில் போட்டு யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்- ராவத்.
    Feb 07, 2021, 2:16 pm IST

    உத்தரகண்டில் பனிப்பாறை உருகியதால் மின் திட்டத்திற்காக பணியாற்றிய 150 பேரின் நிலை என்ன?
    Feb 07, 2021, 2:16 pm IST

    உத்தரகண்டில் பனிப்பாறை உருகி கடும் வெள்ளப்பெருக்கு
    Feb 07, 2021, 2:16 pm IST

    கங்கை ஆற்றங்கரை அருகே செல்வது ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கை
    Feb 07, 2021, 2:11 pm IST

    கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்
    Feb 07, 2021, 2:10 pm IST

    நந்த தேவி பனிக்குன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தலைமை செயலாளர் தகவல்
    READ MORE

    Live updates: Uttarkhand Glacier burst 100- 150 casualities feared
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+