அமெரிக்க கைதிகளை விட "மோசமான" நிலையில் மும்பை மக்கள்!
மும்பை: உலகிலேயே மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரம் மும்பை தான் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் ஒன்று மும்பை. வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இங்கு குடியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையின் மக்கள் அடர்த்தியைக் குறைக்க மும்பையின் ப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ் திட்டமிட்டது. ஆனால், அத்திட்டம் நடைபெறவில்லை.

மும்பையில் குடியேறும் மக்கள்...
தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக மும்பையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் வாய்ப்புகளை வாரித் தரும் நகரமாக மும்பை இருப்பது தான்.

சொந்த ஊராக்கும் முயற்சி...
இவ்வாறு மும்பையில் குடியேறும் மக்கள், அதனை தங்கள் சொந்த வீடாக்க முயற்சிக்கிறார்கள். இதனால், வசதி படைத்தவர்கள் அங்கு சொந்த வீடு வாங்குகிறார்கள், மற்றவர்கள் சேரிப் பகுதியை உருவாக்கி விடுகிறார்கள்.

மக்கள் அடர்த்தி அதிகம்...
இதனால், உலகிலேயே மும்பையில் தான் அதிகளவு மக்கள் தொகை அடர்த்தி காணப்படுகிறது. இவ்வாறு மக்கள் தொகை அதிகரிக்கும் போது மக்களுக்குத் தேவையான இடவசதியை அதிகரிப்பது மற்ற நகரங்களில் வாடிக்கை. ஆனால், மும்பையில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் இந்த அளவானது மாற்றம் செய்யப்படாமலேயே உள்ளது.

அமெரிக்க சிறையை விடக் குறைவு...
மும்பையில் சராசரியாக ஒரு குடிமகனுக்கு 48 சதுர அடி என்ற அளவே வசிக்க இடம் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்க சிறைகளோடு ஒப்பிடுகையில், அதை விட மிகக் குறைவாகவே உள்ளன. ஆம், அமெரிக்க சிறைகளில் தனியொரு கைதிக்கு 45 முதல் 60 சதுர அடி வரை இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

செலவிற்கு தக்க வருமானமில்லை...
இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் மும்பையில் செலவிற்கு தக்க வருமானமில்லை. சராசரியாக மும்பை வாழ் இந்தியர் ஒருவர் 308.1 ஆண்டுகள் உழைத்தால் மட்டுமே 100 சதுர மீட்டர் குடியிருப்பு வாங்க இயலும் என்கிறது இந்த புள்ளி விபரங்கள். ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இதே போன்று வீடு வாங்க, அமெரிக்கர்கள் 48.4 ஆண்டுகள் உழைத்தாலே போதுமானது.

அதிகரிக்கும் சேரிப்பகுதி...
மும்பையில் சரிபாதி மக்கள் சேரிப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு மும்பையில் சேரிப்பகுதியின் அளவு அதிகரித்து வருகிறது. இங்கு வாழும் மக்களின் வருமானது சராசரி இந்திய குடிமகனின் வருமானத்தை விட கூடுதலாகவே உள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications