லோக்சபாவில் 17வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி.. பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
லோக்சபாவில் 17வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் 17வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இந்நிலையில் அதிமுகவும் பாஜகவும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று கூறியது குறித்து அதிமுக எம்பிக்கள் உரிமை மீறல் நோட்டிஸ் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் லோக்சபா பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஒத்திவைப்பு நடவடிக்கைகளால் அவை நடவடிக்கையும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications