காங். எம்.பி.க்களுடன் சோனியா நாளை ஆலோசனை
டெல்லி: லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கட்சி எம்பிக்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சி முடிவடையும் நிலையில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கட்சி எம்பிக்ளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இரவு விருந்துடன் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ல இருக்கின்றனர்.
கடந்த 15-வது நாடாளுமன்ற கடைசி கூட்டம் நிறைவடைந்த போது தெலுங்கான விவகாரம் தீவிரமடைந்திருந்ததால் சோனியா, காங்கிரஸ் எம்பிக்களுக்கு பிரிவுபசார விருந்தளிக்கவில்லை. இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் முன்பாக சோனியா தமது கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications