13 சீமாந்திரா எம்.பி.க்களின் ராஜினாமாவை நிராகரித்தார் சபாநாயகர் மீரா குமார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 சீமாந்திரா எம்.பி.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததை சபாநாயகர் மீராகுமார் ஏற்கவில்லை.
ஆந்திர பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க சீமாந்திரா எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 13 எம்.பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மீரா குமாரிடம் கடிதம் கொடுத்திருந்தனர்.

தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றாக வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் வழக்கு கூட தொடர்ந்திருந்தார். இந்நிலையில் 13 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்திருப்பதாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications