மார்ச்- ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த காங்கிரஸ் முடிவு?

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிர்பாராத நெருக்கடி உருவாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களே மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் தீவிர லாபியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் விரைவில் தேர்தலை எதிர்கொள்வது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இதனால் நடப்பு நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தை பிப்ரவரி மாதத்தின் இறுதியில் நடத்தவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் 16- மே 13 வரையிலான கால கட்டத்தில் நடைபெற்றது. மே 16-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் மே 10ந் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டது. மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதைப் போலவே அடுத்த ஆண்டும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவான நாடாளுமன்ற கூட்டத்தை நிறைவு செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications