புதிய சர்ச்சை.. பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: பாஸ்போர்ட்டில் தாமரை சின்னத்தை அச்சிட்டு மத்திய அரசு புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலி பாஸ்போர்ட்டுகளை எளிதாக அடையாளம் காண்பதற்காக தாமரை சின்னம் அச்சிடப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை கொண்டுவந்துள்ள மத்திய அரசு, தற்போது புதிய கொள்கைகள் பலவற்றை அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பாஸ்போர்ட்டில் தாமரை சின்னத்தை அச்சிட்டு புதிய சர்ச்சையை மத்திய அரசு கிளப்பி உள்ளது.

என் தாமரை முத்திரை
லோக்சபாவில் நேற்று முன்தினம் நடந்த கேள்வி நேரத்தில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ராகவன் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அவர் தனது பேச்சின் போது, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிதாக விநியோகிக்கப்பட்டு இருக்கும் பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை இடம் பெற்றுள்ளது. இது குறித்து நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளது.

எதிர்க்கட்சிகள்
பாஸ்போர்ட்டில் தேர்தல் சின்னமான தாமரை இடம் பெறுவது ஏன்? நாட்டை காவி மயம் ஆக்கும் பாஜகவின் முயற்சியா? என்று ராகவன் கேள்வி எழுப்பினார். இவரை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் இந்த பிரச்னையை எழுப்பி கூச்சலிட்டனர்.

தேசிய மலர் தாமரை
இதனிடையே இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "புதிய பாஸ்போர்ட்டில் பாதுகாப்பு அம்சமாக தேசிய மலரான தாமரை அச்சிடப்பட்டுள்ளது. இது போலி பாஸ்போர்ட்டுகளை எளிதில் அடையாளம் காண உதவும்.

வேறு சின்னமும்
சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டுதல் படி, பாஸ்போர்ட்டில் இந்த பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தாமரை மட்டுமின்றி நாட்டின் தேசிய சின்னங்களும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் பயன்படுத்தப்படும். இப்போது தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது.அடுத்த மாதம் வேறு தேசிய சின்னம் பயன்படுத்தப்படும்" இவ்வாறு கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications