வங்கக்கடல் பகுதியில் வலுவான நிலையில் காற்றழுத்த தாழ்வுபகுதி.. வட மாவட்டங்களில் கனமழை வெளுக்குமாம்!
வங்க கடல் பகுதியில் வலுவான நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: வங்க கடல் பகுதியில் வலுவான நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை நகர் முழுவதும் சில்லென ஆகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்நிலையில் வங்க கடல் பகுதியில் வலுவான நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேற்கில் நகரும்
வளிமண்டல மேலடுக்கில் நிலவி வந்த காற்று சுழற்சி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திசைநோக்கி வடமேற்கு வங்க கடலில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடல் பகுதியில் மையம் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரியில்
நாளைக்குள் தெற்கு ஒடிசாவை கடந்து சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசம் நோக்கி செல்லும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அந்தமான், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை வாய்ப்பில்லை என்றாலும் தமிழக வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications