அடடே.. ஒரே நேரத்தில் சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் தேர்தல் நடத்த.. தம்பிதுரையும் ஆதரவு!
சட்டசபை, நாடாளுமன்றத்திற்கு ஒரே தேர்தல் நடத்தும் முடிவை ஆதரிப்பதாக மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி : 2019ம் ஆண்டு முதலே சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் செலவைக் குறைக்கும் வகையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்ற கருத்து பரவலாக இருக்கிறது. மத்திய அரசும் இந்த முடிவிற்கு பச்சைக்கொடி காட்டி தேர்தல் கமிஷனின் கருத்தை கேட்டுள்ளது.
அதேசமயம், இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பாஜக தரப்பில் நெருக்கடி தரப்படுவதாகவும் ஒரு சர்ச்சை உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு உடனடி ரியாக்ஷனை அதிமுக காட்டியுள்ளது.

மோடிக்கு தம்பித்துரை கடிதம்
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

2019ல் அமல்படுத்தக் கோரிக்கை
மேலும் 2019ம் ஆண்டு முதலே இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவைப் பொருத்த வரையில் தேர்தல் நடத்த பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கமே சரியான நேரமாக இருக்கும் என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

மழை, வெயில், தேர்வு கிடையாதாம்
இந்த காலகட்டத்தில் பள்ளிகளில் தேர்வு கிடையாது, கோடை காலம் வெப்பம் இருக்காது, மேலும் மழையும் இருக்காது. எனவே 2019 பிப்ரவரி இறுதி அல்லது 2019 மார்ச் மாத தொடக்கத்தை தேர்தலுக்கான கால அட்டவணையாக அறிவிக்க வேண்டும் என்று தம்பிதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

20 மாநிலத் தேர்தல் நடத்தலாம்
முதற்கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலோடு 20 மாநிலத் தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தலுக்காக செலவாகும் பணம் குறையும். மேலும் அரசு இந்தத் தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த முடியும் என்றும் தம்பிதுரை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications