'ப்ளூ கார்னர் நோட்டீஸ் குற்றவாளி' லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ராஜினாமா செய்க: காங். வலியுறுத்தல்!
டெல்லி: பொருளாதார குற்றங்களுக்காக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எப்படி உதவலாம்? சுஷ்மா ஸ்வராஜ் சட்டவிதிகளை மீறியிருப்பதை எப்படி மத்திய அரசு ஏற்கிறது? அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என்று லோக்சபாவில் காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார்.
இந்திய நீதிமன்றத்தால் தேடப்படுகிற குற்றவாளியான இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் கடந்த சில மாதங்களாக பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி 2 வார காலமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.

லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியதாக முதலில் கூறிய சுஷ்மா ஸ்வராஜ், தாம் லலித் மோடிக்கு உதவியதாக ஒரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? என்று அந்தர் பல்டியும் அடித்தார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுஷ்மா ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் லோக்சபாவில் திடீரென லலித் மோடி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். மொத்தம் 2 மணி நேரம் 30 நிமிடம் இந்த விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விவாதத்தைத் தொடங்கி வைத்து லோக்சபா காங்கிரஸ் கட்சிக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோவிலும் டிவியிலும் பேசுகிறார்.. அவர் இங்கே இந்த விவாதத்துக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
லலித் மோடிக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் சுஷ்மா ஸ்வராஜ் அவருக்கு உதவியது ஏன்? சுஷ்மாவின் குடும்பத்தினர் லலித் மோடியின் வழக்கறிஞர்களாக இருப்பதால் அவரைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள்.
லலித் மோடியின் பொருளாதார குற்றங்களைப் பற்றி தெரிந்த பின்னரும் உரிய விசாரணைக்கு நிதி அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சுஷ்மா ஸ்வராஜ் சட்ட விதிகளை மீறி இருப்பதை ஏற்பதற்கு மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?
இந்த விவாதத்தை முன்னரே நடத்தியிருந்தால் நாடாளுமன்றத்தின் நேரம் மிச்சமாகியிருக்கும். இந்த விரயத்துக்கு பிரதமரும் மத்திய அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
லலித் மோடிக்கு உதவ விரும்பியிருந்தால் அவரை இந்தியாவுக்கு வருமாறுதான் சுஷ்மா கூறியிருக்க வேண்டுமே தவிர சட்ட விதிகளை மீறி உதவி செய்திருக்கக் கூடாது. ரூ460 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்த ஒரு நபருக்கு எப்படி மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா உதவி செய்யலாம்?
ஆகையால் தார்மீக அடிப்படையில் சுஷ்மா ஸ்வராஜ் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்










Click it and Unblock the Notifications