'ப்ளூ கார்னர் நோட்டீஸ் குற்றவாளி' லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ராஜினாமா செய்க: காங். வலியுறுத்தல்!
டெல்லி: பொருளாதார குற்றங்களுக்காக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எப்படி உதவலாம்? சுஷ்மா ஸ்வராஜ் சட்டவிதிகளை மீறியிருப்பதை எப்படி மத்திய அரசு ஏற்கிறது? அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என்று லோக்சபாவில் காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார்.
இந்திய நீதிமன்றத்தால் தேடப்படுகிற குற்றவாளியான இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் கடந்த சில மாதங்களாக பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி 2 வார காலமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.

லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவியதாக முதலில் கூறிய சுஷ்மா ஸ்வராஜ், தாம் லலித் மோடிக்கு உதவியதாக ஒரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா? என்று அந்தர் பல்டியும் அடித்தார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுஷ்மா ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் லோக்சபாவில் திடீரென லலித் மோடி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். மொத்தம் 2 மணி நேரம் 30 நிமிடம் இந்த விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விவாதத்தைத் தொடங்கி வைத்து லோக்சபா காங்கிரஸ் கட்சிக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோவிலும் டிவியிலும் பேசுகிறார்.. அவர் இங்கே இந்த விவாதத்துக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
லலித் மோடிக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் சுஷ்மா ஸ்வராஜ் அவருக்கு உதவியது ஏன்? சுஷ்மாவின் குடும்பத்தினர் லலித் மோடியின் வழக்கறிஞர்களாக இருப்பதால் அவரைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள்.
லலித் மோடியின் பொருளாதார குற்றங்களைப் பற்றி தெரிந்த பின்னரும் உரிய விசாரணைக்கு நிதி அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சுஷ்மா ஸ்வராஜ் சட்ட விதிகளை மீறி இருப்பதை ஏற்பதற்கு மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?
இந்த விவாதத்தை முன்னரே நடத்தியிருந்தால் நாடாளுமன்றத்தின் நேரம் மிச்சமாகியிருக்கும். இந்த விரயத்துக்கு பிரதமரும் மத்திய அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
லலித் மோடிக்கு உதவ விரும்பியிருந்தால் அவரை இந்தியாவுக்கு வருமாறுதான் சுஷ்மா கூறியிருக்க வேண்டுமே தவிர சட்ட விதிகளை மீறி உதவி செய்திருக்கக் கூடாது. ரூ460 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்த ஒரு நபருக்கு எப்படி மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா உதவி செய்யலாம்?
ஆகையால் தார்மீக அடிப்படையில் சுஷ்மா ஸ்வராஜ் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே











Click it and Unblock the Notifications