நாடாளுமன்றத்தில் கண்ணியத்தை நிலைநாட்டுங்கள்.... சபாநாயகர் எம்.பிக்களுக்கு கடிதம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும், அவையின் புனிதம் கருதி கண்ணியத்துடன் நடந்து கொள்ளுங்கள் என அனைத்து கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் வியாபம் முறைகேடு, லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தற்போது குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், சகிப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கையில் எடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இநிலையில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு அனைத்து கட்சி எம்பிக்களுக்கும் சுமித்ரா மகாஜன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், அனைவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது கண்ணியமான நடவடிக்கையைத்தான். ஒரு சபாநாயகர் என்ற முறையில் நான் உங்கள் அனைவரிடமும் மக்களவையில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஜனநாயகத்தின் கோயிலாக இந்த நாடாளுமன்றம் கருதப்படுகிறது. எனவே அனைவரும் இந்த அவையின் புனிதத்தை மதித்து, மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கருத்து மோதல்கள் ஏற்படும் போது நம் கண்ணியத்தை நாம் காற்றில் பறக்க விட்டுவிடக் கூடாது. அவ்வாறு கண்ணியத்தை தவற விடும்போது நமது நாட்டை பற்றியும் ஒரு தவறான கருத்தை உருவாக்க நாமே காரணமாக இருந்து விடுகிறோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசித் தீர்வு காண வேண்டும், என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications