தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பிடித்து நையப்புடைத்த பெண்: தீயாக பரவும் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பிடித்து பொது இடத்தில் வைத்து இளம்பெண் ஒருவர் அடித்து நொறுக்கியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த நபரை பிடித்து இழுத்து வந்து பொது இடத்தில் வைத்து அடித்து நொறுக்கினார்.

அடிக்கையில் அவரின் செயலை சொல்லி சொல்லி திட்டி அடித்தார். தன்னை விட்டுவிடுமாறு அந்த நபர் கேட்டார். ஆனால் அந்த பெண் தனது கோபம் தீரும் வரை அவரை அடித்தார். இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் அவ்வப்போது பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக செய்திகள் வருகிறது. என்னவென்று மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கேட்டால் மீடியாக்கள் ஏன் எப்பொழுது பார்த்தாலும் என் மாநிலத்தையே கவனித்துக் கொண்டிருக்கிறது என தெரியவில்லை என்றார்.
4 பேர் எப்படி ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடியும் என்று கூறிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications