For Daily Alerts
Just In
பிரதமரைச் சந்தித்த அழகிரி.. திமுகவிலிருந்து நீக்கியதற்காக வருத்தப்பட்ட மன்மோகன் சிங்!
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, மதுரை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வியாழக்கிழமை காலை, சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
பின்னர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சராக பணிபுரிய வாய்ப்பு தந்ததற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன் எனக் கூறினார்.
மேலும் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தியதாகவும் அழகிரி தெரிவித்தார். காங்கிரஸ் அணியில் இருந்து திமுக விலகியது வருத்தமளிப்பதாக பிரதமர் கூறினார் என அழகிரி தெரிவித்தார்.
அடுத்தகட்ட முடிவு பற்றி ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு 2 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என அழகிரி கூறினார்.
English summary
Former Minister M.K. Alagiri on Thursday met Prime Minister Manmohan Singh in Delhi.
Story first published: Thursday, March 13, 2014, 10:58 [IST]