மூக்குக்கண்ணாடியை இரவல் வாங்கி பதவிப்பிரமாணம் எடுத்த எம்.பி!
டெல்லி: டெல்லியில் இன்று பதவிப்பிரமாண உறுதிமொழி வாசிக்க மூக்குக் கண்ணாடி எடுத்து வராததால் கடன் வாங்கி படித்துள்ளார் எம்.பி ஒருவர்.
மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர். அப்போது லோக் ஜனசக்தி கட்சி உறுப்பினர் வீணா தேவி தனது மூக்குக்கண்ணாடியை கொண்டு வர மறந்து விட்டார்.
இதனால் மக்களவை ஊழியர் ஒருவரிடம் கண்ணாடியை இரவல் வாங்கி, அதனை அணிந்து பதவிப் பிரமாண உறுதிமொழியை வாசித்தார். அவர் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
டெல்லி பாஜக எம்.பி மனோஜ் திவாரி பதவியேற்க வந்தபோது சக உறுப்பினர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர்.
பீகார் பா.ஜ,க எம்.பி. கீர்த்தி ஆசாத் பாரம்பரிய மைதிலி ஆடை அணிந்தும், குஜராத் எம்.பி.க்களான தேவுசின் ஜென்சிங்பாய் சவுகான், மோகன்பாய் கல்யாண்ஜி பாய் குண்டரியா ஆகியோர் குஜராத்தி பாரம்பரிய உடைகள் அணிந்தும் அவைக்கு வந்திருந்தனர்.