2 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் திறக்கப்பட்ட பெட்ரோல் பங்குகள்.. கூட்டமோ, கூட்டம் #bengaluru
பெங்களூர்: இரு நாட்களுக்கு பிறகு பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டதால் பெங்களூர் பங்குகளில் பெரும் கூட்டம் நிலவியது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் பெங்களூரில் நேற்று முன்தினம் கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் தீக்கிரையாகின. அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற தமிழக நிறுவனங்கள் பெங்களூரில் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து மாலையில் 144 தடையுத்தரவு பெங்களூரில் அமல்படுத்தப்பட்டது. கலவரம் தொடர்ந்ததால், 16 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் இரவு, போலீஸ் வாகனத்தை கொளுத்த முயன்ற உமேஷ் என்ற 25 வயது இளைஞர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடுக்கு பிறகு கலவரக்காரர்கள் வயிற்றில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போலீசார் சுட்டு கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தால் நேற்று காலை முதல் நகரில் புதிதாக கலவரம் ஏதும் நடைபெறவில்லை.
அதேநேரம், கலவரம் நடைபெறும் என்ற பீதி காரணமாக, பெங்களூரில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்களில் படம் திரையிடப்படவில்லை. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மாலையில்தான் நகரம் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.
இன்று காலை முதல் அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்தனர். 2 நாட்களாக எரிபொருள் நிரப்ப முடியவில்லை என்பதால் இன்று நீண்ட கியூவில் நின்று எரிபொருள் நிரப்பினர். ஒவ்வொரு வாகன ஓட்டியும், அரை மணி நேரமாவது கியூவில் நின்று பெட்ரோல் போட வேண்டியதாயிற்று. இதனால் பலரும் அலுவலகங்களுக்கு தாமதமாக போய் சேர்ந்தனர்.
-
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications