Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“விந்தியா”.. இந்த ஏரியாவை பிடிச்சா காங்கிரஸ் ‘கிங்’.. மத்திய பிரதேச வெற்றியை தீர்மானிக்கும் 30 சீட்!!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், ம.பியின் விந்தியா பகுதி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. விந்தியா மண்டலம், மாநிலத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு, பாஜகவை தகர்த்தால், ஆட்சி நமக்குத்தான் என்ற நம்பிக்கையில் உள்ளது காங்கிரஸ் கட்சி.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன. இதையடுத்து, இந்த மாநிலங்களில் யார் வெல்லப்போவது என நாடு முழுவதும் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

The deciding territory of Madhya pradesh: Who will capture vindhya region in assembly election 2023

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்: கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச தேர்தல் நிலவரத்தின்படி, மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ம.பி முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்.

ஆனால் , ஆட்சி அமைத்த ஒன்றறை வருடத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமாக இருந்த, ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் கூட்டாக ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதனை அடுத்து, 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியது. 2020 மார்ச் மாதத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றார்.

பலப்பரீட்சை: இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல் காங்கிரஸ் - பாஜக இடையே பலப்பரீட்சைக்கான களமாக அமைந்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை கூட்டணி ஆட்சி அமைத்தாலும், அதனை தக்க வைக்க முடியாத காரணத்தால் இந்த முறை பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தேர்தல் முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரியத் துவங்கும்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கியமான பகுதி விந்தியா மண்டலம். செழுமையான பாரம்பரியம் மற்றும் நிலப்பரப்புகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தின் விந்தியா பகுதி, இந்த சட்டமன்றத் தேர்தலில் கடுமையான அரசியல் சண்டையை சந்தித்துள்ளது. இது கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ரேவா, ஷாஹ்டோல், சத்னா, சித்தி, சிங்ராலி, அனுப்பூர், உமாரியா, மைஹார் மற்றும் மௌகஞ்ச் ஆகிய மாவட்டங்களில் விந்தியா மண்டலத்தில் அடங்கும்.

வெற்றியை தீர்மானிக்கும் விந்தியா மண்டலம்: 30 இடங்களை கொண்ட விந்தியா மண்டலம், தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. விந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் மற்றும் சித்தாந்தங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்ட அரசியல் ரீதியாக வேறுபட்ட மற்றும் ஆற்றல்மிக்க பகுதி. அதனால், இந்த பகுதிகளின் தேர்தல் ரிசல்ட் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள மக்கள்தொகையில் கணிசமான விகிதத்தில் இருக்கும் பட்டியல் சாதி மக்கள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் தமது ஆதரவு தளத்தை ஒருங்கிணைப்பதை காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் முன்னாள் முதல்வரும், விந்தியா பகுதியைச் சேர்ந்த முக்கியத் தலைவருமான கமல்நாத் உள்ளார்.

பாஜக கோட்டை: 2003 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. 2003ல் விந்தியா மண்டலத்தில் மொத்தமுள்ள 30 இடங்களில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு அமைந்தது. 2008 மற்றும் 2013 தேர்தல்களிலும் பாஜக தனது செயல்திறனை நிரூபித்து, முறையே 24 மற்றும் 23 இடங்களை வென்றது. இந்த இரண்டு முறையும் ம.பியில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

இருப்பினும், 2018-ல், நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஒரு சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது காங்கிரஸ். அப்போது, விந்தியா மண்டலத்தில் காங்கிரஸ் கட்சியிடம் 6 இடங்களை இழந்தது பாஜக. ஆட்சியையும் இழக்க நேரிட்டது. பின்னர், ஜோதிராதித்ய சிந்தியாவின் கட்சி தாவலால், மீண்டும் ஆட்சியைப் பிடித்தது வேறு கதை.

விந்தியாவை வென்றால் ம.பியில் ஆட்சி: 1980கள் மற்றும் 1990களில் ஒரு காலத்தில் விந்தியா பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது காங்கிரஸ். காங்கிரஸின் வீழ்ச்சிக்குப் பிறகு 2020 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜகவுக்கு எதிரான அலையைப் பயன்படுத்தி, வரவிருக்கும் 2023 தேர்தல்களில் இழந்த இடத்தை மீண்டும் பெற முடியும் என நம்புகிறது காங்கிரஸ். விந்தியா பகுதியை தட்டித் தூக்கினாலே ஆட்சி நமக்குத்தான் என காங்கிரஸ் கட்சி இப்பகுதியில் கடுமையாக தேர்தல் வேலை செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியின் முதல் மக்களவை உறுப்பினரான பீம் சிங் படேல், 1991 இல் விந்தியா பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து 1993 இல் மாநில சட்டமன்றத்தில் சிபிஐஎம் கட்சியிலிருந்து ராம் லக்கன் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் விந்தியா பகுதியின் சிங்ராலி தொகுதியில் இருந்து மாநில சட்டசபைக்குள் நுழைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விந்தியா பகுதியில் தேர்தல் முடிவுகள், மத்திய பிரதேச அரசியலின் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், 20 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் கைகளில் இருந்து நழுவிய விந்தியா மண்டலத்தை மீண்டும் தனதாக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. காங்கிரஸின் இந்த முயற்சி பலிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+