மீண்டும் சிக்குகிறார் பிரக்யா சிங்.. சுனில் ஜோஷி கொலை வழக்கை தூசு தட்டுகிறது மத்திய பிரதேச அரசு!
Recommended Video
போபால்: பாஜக லோக்சபா வேட்பாளரும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் மீண்டும் ஒரு நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு பள்ளி வாசல் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர் பெண் சாமியாரும் பாஜகவின் போபால் லோக்சபா தொகுதி வேட்பளருமான பிரக்யா சிங் தாக்கூர். இவர் மீதான இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சுனில் ஜோஷி கொலை
அது மட்டுமின்றி கடந்த 2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி அதே ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கருத்துவேறுபாட்டால் கொலை
இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு ஏஜென்சி சுனில்ஜோஷி படுகொலைக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தது. அதேநேரத்தில் பெண் சாமியாரான பிரக்யா சிங்குடனான கருத்துவேறுபாட்டால் சுனில் ஜோஷி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

8 பேரும் விடுவிப்பு
இதுதொடர்பாக பிரக்யா சிங் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என கூறி பிரக்யா சிங் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

தூசு தட்டும் அரசு
இந்நிலையில் இந்த வழக்கை மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தற்போது தூசு தட்டுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென்னுக்கு எதிர்க்கட்சியான பாஜக நேற்று கடிதம் எழுதியது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய பிரச்சனை
மத்தியபிரதேச மாநிலம் போபால் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங், பல்வேறு பிரச்சனைகளில் சிக்கினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பிரக்யா சிங் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறியதற்காக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ஃபிரஷ்ஷாக ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் பிரக்யா சிங்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications