நள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி
போபால்: நள்ளிரவில் நீதிபதியின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர்கள், நீதிபதியை சிறைபிடித்து மிரட்டிய நிலையில், அவரிடம் வெறும் 500 ரூபாய் மட்டுமே இந்ததால் அவரிடம் இருந்த 500 ரூபாயை பிடுங்கிக்கொண்டு தப்பி ஒடிவிட்டனர். இச்சம்பவம் ம்த்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் சிறப்பு நீதிபதியாக இருப்பவர் சுரேந்தர்குமார். இவர் சப்பாஹா காலனியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். அவருடன் இருக்கும் சென்டரி நேற்று விடுமுறையில் இருந்துள்ளார். பியூன் மட்டும் உடன் இருந்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நீதிபதி சுரேந்தர்குமார் வீட்டில் கண் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் 3 முதல் 4 கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் பியூன் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை மூடினர்.
பின்னர் அவர்கள் நீதிபதி சுரேந்தரை சிறைபிடித்தனர். அவர் மிரட்டி உட்கார வைத்து வீடு முழுவதும் பணம் மற்றும் நகைகள் இருக்கிறதா தேடினர். ஆனால் எதுவுமே வீட்டில் இல்லை. இதையடுத்து நீதிபதியிடம் இருந்து 500 ரூபாய் பணத்தை மட்டும் பிடுங்கி கொண்டு அவரை விட்டுவிட்டு வீட்டில் இருந்து தப்பிஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் வீட்டைவிட்டு போன பின்னர் நீதிபதி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். நீதிபதி பணத்தை ரொக்கமாக வைத்திருக்கவில்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே கொள்ளை போனதாக உமரியா மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சச்சின் சர்மா தெரிவித்தார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications