ம.பி.யில் 2 நகரங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு; மாஸ்க் அணியாவிட்டால் சிறை... அரசு எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 700-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

Madhya Pradesh: night curfew impose in Bhopal, Indore from today

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் இன்று முதல் 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கடைகள் முழுவதுமாக அடைக்கப்படும் மக்கள் வெளியில் வருவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர், கார்கோன், உஜ்ஜைன், ரத்லம், சிந்த்வாரா உள்பட 10 நகரங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்துள்ளது.

மேலும், மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்கள் திறந்த சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+